அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் பதவியை ராஜினாமா செய்வதாக துளசி கப்பார்ட் அறிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து தேசிய உளவுத்துறை இயக்குநராக துளசி கப்பார்ட் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது கணவர் ஆபிரகாமுக்கு எலும்புப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாகவும் இக்கட்டான சூழ்நிலையில் அவருக்குப் பக்கபலமாக இருக்க பொதுப்பணியில் இருந்து விலகுவதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து அமெரிக்க உளவுத்துறையின் புதிய இயக்குநராக ஆரோன் லூகாஸ் என்பவரை நியமித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், துளசி கப்பார்ட் தனது பதவியில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார் என கூறியுள்ளார். கணவரை மீண்டும் நல்ல ஆரோக்கியத்திற்கு கொண்டு வர விரும்புவது சரியான முடிவு எனவும் ஆபிரகாம் விரைவில் குணமடைந்து சிறப்பான ஆரோக்கியத்தை பெறுவார் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
















