கோவையில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோவையில் 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்களை நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருடன் தனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்வதாக கூறியுள்ளார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்த முதலமைச்சர் விஜய், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை அளிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
















