அமெரிக்காவின் வெள்ளை மாளிகை சோதனைச்சாவடி அருகே, துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
வெள்ளை மாளிகைக்கு அருகே பென்சில்வேனியா அவென்யூ சந்திப்பில் அமைந்துள்ள பாதுகாப்புச் சோதனைச்சாவடிக்கு சனிக்கிழமை மாலை ஒரு நபர் வந்துள்ளார். அவர் எதிர்பாராத விதமாக தனது பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கி திடீரெனச் சுடத் தொடங்கியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து, தற்காப்புக்காக அதிகாரிகள் திருப்பிச் சுட்டதில் பலத்த காயமடைந்த அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் நாசிர் பெஸ்ட் என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, துப்பாக்கிச்சூட்டின் போது, அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்களில் ஒருவரும் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
















