ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் மும்பை அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான், 4-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து ரன் எடுக்க முடியாமல் திணறியது.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான், 4-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது.
















