மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களிடம் வாகன டோக்கன் என்ற பெயரில் வசூல் வேட்டை நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், திருவிழா காலங்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கோயில் நிர்வாகம் சார்பில் பார்க்கிங் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மகளிர் காவல் நிலையம் எதிரே நிற்கும் வாகனங்களுக்கும் சட்டவிரோதமாக டோக்கன் விநியோகப்பட்டு வசூல் வேட்டை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.
இங்கு வாகன காப்பகம் இல்லாத நிலையில், சரவண பொய்கையில் இருக்கும் வாகன காப்பகத்தின் ரசீதை வைத்து, வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களிடமிருந்து கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.
காருக்கு 50 ரூபாய், மினி வேனுக்கு 100 ரூபாய், வேன் அல்லது பேருந்துக்கு 200 ரூபாய் வரை வசூலிப்பதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
















