வேலூர் அருகே தவெக நிர்வாகிகள் மாமூல் கேட்டு மிரட்டுவதாகக் கூறி செங்கல் சூளை உரிமையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தவெக நிர்வாகிகள் விஜயகுமார், லோகேஷ், ஈஸ்வரன் உள்ளிட்டோர் அங்குசென்று மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டுமென செங்கல் சூளை உரிமையாளர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அவர்களை கைது செய்ய வலியுறுத்தி கணியம்பாடி பேருந்துநிலையம் முன்பு செங்கல் சூளை உரிமையாளர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர்.
















