கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலவி வரும் கடும் போக்குவரத்து காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு இலவச அனுமதி என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
கோடை சீசனை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா தளங்களுக்கு செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இரண்டு முதல் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு வரும் 31ஆம் தேதி வரை இலவசமாக செல்லலாம் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
அரசின் அறிவிப்பால் மேலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















