ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குவாலிஃபையர் 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, வைபவ் சூர்யவன்ஷியின் மிரட்டலான ஆட்டத்தால் 243 ரன்கள் குவித்தது.
பின்னர் 244 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணி, 19 புள்ளி 2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் ராஜஸ்தான் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, குவாலிஃபையர் 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்த ஆட்டத்தில் 12 சிக்ஸர்கள் அடித்த சூர்யவன்ஷி, ஐபிஎல் சீசன் ஒன்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெய்லின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்து சூர்யவன்ஷி புதிய உலக சாதனை படைத்தார்.
















