திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை ஒட்டி 100 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாக போற்றப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், வைகாசி விசாக திருவிழா வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரவுள்ளனர்.
இதன் காரணமாக இன்றிலிருந்து வரும் 31-ம் தேதி வரை நூறு ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் மூலம், பக்தர்கள் கட்டணத்தை செலுத்தாமலேயே தரிசனம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















