2 நாள் அரசு முறைப் பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், தமிழகம் புறப்பட்டார்.
முதலமைச்சராக பதவியேற்ற பின் முதன்முறையாக ஜோசப் விஜய் டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து அவர் பேசினார்.
இந்தநிலையில் இன்று காலை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை சந்திக்க முதலமைச்சர் விஜய் சார்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. எனினும் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் இந்த சந்திப்பு ரத்தானது. இதனிடையே முதலமைச்சர் அவசரமாக சென்னை திரும்ப வேண்டிய சூழல் உள்ளதால் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக அரசு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய், அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதனையடுத்து அவர் தமிழகம் புறப்பட்டார்.
















