கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா, ஆளுநர் இல்லாததால் அவரது செயலாளரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
பெங்களூருவில் உள்ள மக்கள் மாளிகையில் தனது ராஜினாமா கடிதத்தை சித்தராமையா வழங்கினார். ஆளுநர் இல்லாததால், அவரது சிறப்புச் செயலாளரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இந்நிலையில், ராஜினாமா கடிதத்தை ஏற்பதற்கான மரபுகள் குறித்து கர்நாடக ஆளுநரின் சிறப்புச் செயலாளர் பிரபுசங்கர் விளக்கம் அளித்தார். அதில், ஆளுநர் வெள்ளிக்கிழமை மாலைக்குள் பெங்களூரு திரும்பிவிடுவார் என்றும், எனவே சித்தராமையா மீண்டும் வந்து ஆளுநரை சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
















