நாட்டின் சுற்றுலாத்துறை பங்களிப்பு 2030ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதத்தை தாண்டும் என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 2023 – 24ஆம் நிதியாண்டின் தரவுகளின்படி, நாடு முழுவதும் சுற்றுலாத்துறை மூலம் 8.4 கோடி பேர் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை பெற்றனர் என தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதற்கேற்ப சுற்றுலாவுக்கான தேவை அதிகரித்து வருகிறது எனவும் கூறினார். 2030ஆம் ஆண்டிற்குள் சுற்றுலா துறையின் பங்களிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதம் என்ற நிலையை எட்டும் என்றும், இதேபோல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் விவசாயத்துறைக்கு அடுத்தபடியாக சுற்றுலாத்துறை விளங்கும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், வரும் 2047ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டு சுற்றுலா பயணியரின் வருகை 10 கோடியை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
















