திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைச்சர் ரமேஷிடம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் அர்ச்சகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூர் கோயிலில் ஆய்வு செய்த அமைச்சரிடம் அர்ச்சகர் ஐயப்பன் ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், அர்ச்சகரிடம் மேற்கொண்ட விசாரணையில் குற்றத்தை ஒப்பு கொண்டதால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்ச்சகர் ஐயப்பன் கோயிலில் பணி செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அர்ச்சகருக்கு உடந்தையாக இருந்த 2 வாயில் காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முடிக்காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் பணம் கேட்ட காரணத்திற்காக 2 பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், சில முறைகேடுகள் கண்டறியப்பட்டு அதற்கான மேல் நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















