இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள BSF வீரர்களுடன் தேநீர் அருந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவர்களுடன் கலந்துரையாடி வீரர்களின் சேவையையும் பாராட்டினார்.
குஜராத்தின் புஜ் பகுதியில் அமைந்துள்ள எல்லை பகுதிக்குச் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கு BSF-க்கான G-7 எல்லைச் சாவடியை திறந்து வைத்தார். அப்போது இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பணியாற்றி வரும் ராணுவ வீரர்களுடன் அமித்ஷா கலந்துரையாடினார். தொடர்ந்து, அங்கு நடந்த தேனீர் விருந்தில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து தேநீர் மற்றும் சிற்றுண்டி சாப்பிட்டார்.
அப்போது அவர்கள் மத்தியில் உரையாற்றிய அமித்ஷா, எல்லைப் பாதுகாப்பில் BSF வீரர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என தெரிவித்தார். மேலும், எல்லை ஊடுருவல், கடத்தல் மற்றும் ட்ரோன் மூலம் நடைபெறும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க பாதுகாப்பு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அமித்ஷா வலியுறுத்தினார்.
















