கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையில் தங்கியுள்ள தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கோடை விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு சென்று விடுமுறையை கழித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்ததோடு பள்ளி திறக்கும் தேதியும் அறிவிக்கப்பட்டதால் கார், வேன், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் மீண்டும் சென்னைக்கு படையெடுத்துள்ளனர்.
இதனால் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிக்கு வருவதால் திருச்சி – சென்னை ஜிஎஸ்டி சாலையில் இரண்டு கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்தவாறு சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றன.
















