உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி - சிறப்பு தொகுப்பு!
Aug 5, 2026, 04:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 12, 2026, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமானத்தின் முதல் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்திய விமானப்படையில் இணையும் இந்த விமானம் வரும் டிசம்பருக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

நீண்டகாலமாகவே பொதுத்துறை நிறுவனங்களின் ஏகபோக கட்டுப்பாட்டில் மட்டுமே நாட்டின் உள்நாட்டு ராணுவ விமானத் தயாரிப்புத் துறை இருந்து வந்தது.

இதனை மாற்றி முதல்முறையாக இந்தியா இராணுவ விமானத்தைத் தயாரிக்கும் ஒப்பந்தம் தனியார் துறைக்கு வழங்கப் பட்டது. அது ‘C-295 இந்தியா’ திட்டமாகும்.

அதன் படி, ஐரோப்பிய Airbus Defence and Space நிறுவனத்துடன் இணைந்து Tata Advanced Systems நிறுவனம் உள்நாட்டிலேயே ஒரு ராணுவ விமானத்தை முழுமையாகத் தயாரித்துள்ளது.

இந்திய விமானப்படையின் பழமையான Avro-748 விமானங்களுக்கு மாற்றாக 56 ‘C-295’ ரக இராணுவப் போக்குவரத்து விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு இந்தியா முடிவெடுத்தது. 2021-ல் 21,935 கோடி இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதன் படி, முதல் 16 விமானங்கள் ஸ்பெயினிலிருந்து ‘பறக்கத் தயாரான’ நிலையில் இந்தியா கொள்முதல் செய்யும் என்றும், மீதமுள்ள 40 விமானங்கள் குஜராத்தில் உள்ள வதோதரா ஆலையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பல்வேறு பாதுகாப்புப் பணிகளுக்குப் பயன்படும் வகையில் தயாரிக்கப்படும் இந்த விமானம், 71 வீரர்கள், 48 பாராசூட் வீரர்களுடன் மருத்துவ அவசரத் தேவைக்கான 24 ஸ்ட்ரெச்சர்களைச் ஏற்றிச் செல்லும் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், குறுகிய தூரத்தில் புறப்பட்டு தரையிறங்கும் (STOL) திறன் கொண்ட டர்போப்ராப் (turboprop) விமானமான இந்த ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமானம், தொலைதூர மற்றும் மலைப்பாங்கான எல்லைப் பகுதிகளிலும் கரடுமுரடான, சமமற்ற ஓடுதளங்களிலும் சிறப்பாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த புதன் கிழமை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமானம், குஜராத்தின் வதோதராவில் உள்ள டாடா-ஏர்பஸ் இறுதி அசெம்பிளி லைன் (FAL) மையத்திலிருந்து சோதனைக்காக வானில் பறந்தது.

விமான அமைப்புகளின் முக்கியமான செயல்முறைகளை மேற்கொண்ட இந்த விமானம்
தனது முதல் சோதனைப் பறப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

சுயசார்பு இந்தியாவின் வெற்றியாக கருதப்படும் இது இந்தியாவின் வளர்ந்து வரும் விண்வெளி மற்றும் விமானத் தயாரிப்புத் திறன்களை வலுப்படுத்தியுள்ளது என்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் திறனை வளர்ப்பதற்கான இந்திய விமானப்படையின் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது என்றும் இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

உண்மையில் ஏர்பஸ் C-295-ன் சோதனை வெற்றி என்பது பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் ஒரு பெரிய முன்னேற்றமாகும்.

Tags: TATA Advanced SystemsAirbus C-295Airbus C-295 military transport aircraft.European firm Airbus Defence and Space
ShareTweetSendShare
Previous Post

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

Next Post

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies