பயிர்க்கடன் விவகாரத்தில் பாஜக ஆளும் மராட்டிய மாநிலத்தை பார்த்து முதலமைச்சர் விஜய் கற்றுக் கொள்ள வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 75 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு 100% தள்ளுபடி எனவும், அதற்கு மேல் கடன் இருந்தால் வெறும் ரூ 35 ஆயிரம் வரை மட்டுமே தள்ளுபடி எனவும் கூறுவது, சமூக சமநிலைக்கு எதிரானது என கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், பயிர்க்கடன் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய், விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
55 லட்சம் விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்த பாஜக ஆளும் மராட்டிய மாநிலத்தைப் பார்த்து முதலமைச்சர் விஜய் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என சாடியுள்ளார்.
மேலும், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாமல் அரசை நம்பியிருக்கும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
















