தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுமார் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகள், பட்டீஸ்வரம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டன.
இவை அரவைக்கு அனுப்பாமல் பல மாதங்களாக திறந்தவெளியில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இப்பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையால், சுமார் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள் நனைந்தன.
நெல் மணிகள் முளைத்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனிடையே நெல் மணிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.
















