மைசூருவில் பின்னணி பாடகி எஸ். ஜானகியின் உடலுக்கு பொதுமக்களும் திரைப்பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகி உடல் நலக்குறைவால் மைசூருவில் நேற்று காலமானார். அவரின் மறைவுக்கு குடியரசுத்தலைவர், குடியரசு துணைத்தலைவர், பிரதமர், அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில், ஜானகியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்களும் பொதுமக்களும் அவரின் உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். மாலை 5 மணியளவில் பாடகி எஸ்.ஜானகியின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.
















