ஹைட்ரஜன் ரயில்களை கொண்ட ஒருசில நாடுகளில் இந்தியாவும் இணைவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ரயில்வே துறையில் இந்தியா தூய்மையான தொழில்நுட்பத்தை பின்பற்றுவதை உறுதி செய்வதில் ஹைட்ரஜன் ரயில் பெரும் பங்கு வகிக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ரயில்வே உள்கட்டமைப்புக்கு இன்றைய நிகழ்ச்சி மிகவும் முக்கியமானது எனவும், அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட 75 ரயில் நிலையங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்..
இந்த நிலையங்கள் பயணிகளுக்கு சிறந்த வசதிகளை உறுதி செய்யும் என தெரிவித்த பிரதமர் மோடி, வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் என்ற உணர்வை அவை உள்ளடக்கியுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்…
அமிர்தசரஸ் மற்றும் வாரணாசி இடையேயான ரயில் சேவை, இந்தியாவின் இரண்டு முக்கியமான மத மற்றும் கலாச்சார மையங்களை இணைக்கும் எனவும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
















