முதலமைச்சரை மிரட்டும் தொனியில் பேசியதாக கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில், அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, நீதிமன்ற காவலில் வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், ஜாமின் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைக்காமல் நேரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக எம்எல்ஏ தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானதாகவும், கைது செய்வததில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை எனவும் எதிர்தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டது.
















