மொராக்கோவிலிருந்து ஒரே நாளில் சுமார் 60,000 அகதிகள் ஸ்பெயினுக்குள் நுழைய முயன்றபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 57 பேர் உயிரிழந்தனர்.
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கடுமையான வறுமை, வேலைவாய்ப்பின்மை நிலவி வருவதால், அண்டை நாடான ஸ்பெயினுக்குள் ஏராளமானோர் ஊடுருவி வருகின்றனர். ஸ்பெயினின் வட ஆப்பிரிக்க பகுதியான சியூட்டா அல்லது மெலில்லா நகருக்கு வரும் அகதிகளை உடனுக்குடன் மொராக்கோவிற்குத் திருப்பி அனுப்பக் கூடாது என்று அண்மையில் ஸ்பெயின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, மொராக்கோவில் இருந்து ஒரே நாளில் சுமார் 60 ஆயிரம் பேர் சியூட்டா மற்றும் மெலில்லா நகருக்குள் தரைவழியாகவும், கடல் வழியாகவும் நுழைய முயன்றனர்.
அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 57 பேர் உயிரிழந்தனர். மனித கடத்தல் கும்பல்களே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து ஸ்பெயின் எல்லையில் அதிக அளவிலான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சுமார் 48,000 அகதிகள் மொராக்கோவுக்கே திரும்பிச் சென்றுவிட்டதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.
















