செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில், பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
பொத்தேரியில் பிரபல தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் அடுக்குமாடி குடியிருப்பிலும், விடுதிகளிலும் தங்கி வருகின்றனர். இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி உள்ள மாணவர்கள், கஞ்சா உள்ளிட்ட உயர்ரக போதை பொருட்களை பயன்படுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் தாம்பரம் மாநகர காவல் துறை சார்பில், 100-க்கும் மேற்பட்ட போலீசார், அடுக்குமாடி குடியிருப்புகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
















