சுதந்திர தினத்திற்கு முன்பாக, நாட்டில் நடைபெற இருந்த பயங்கரவாத தாக்குதலை பாதுகாப்பு படை முறியடித்துள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சுதந்திர தினத்திற்கு முன்பாக, ஐ.எஸ்.ஐ ஆதரவு பெற்ற ஷாசாத் பட்டி பயங்கரவாத வலையமைப்பின் சதித்திட்டத்தை பாதுகாப்பு படைகள் முறியடித்ததாக தெரிவித்துள்ளார். 14 மாநிலங்களில் இந்திய பாதுகாப்பு படை மேற்காண்ட ஒருங்கிணைந்த சோதனையில், 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சக்திவாய்ந்த வெடிபொருட்கள், பாகிஸ்தான் தொழிற்சாலை முத்திரையுடன் கூடிய கையெறி குண்டுகள், துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.
















