நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!
Aug 30, 2026, 05:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 30, 2026, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களில் 633 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பேரழிவால் நேபாள- சீன எல்லையில் இமயமலைப் பகுதியில் சுனாமி போன்ற பேரலைகளும் குப்பைக் கூளங்களும் கிராமங்களை மூழ்கடித்துச் சென்ற சில நாட்களுக்குப் பிறகும் அந்தத் துயரச் சம்பவத்தின் கோரத் தாண்டவத்தின் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

பனிப்பாறை சரிவுதான் இந்த பேரழிவிற்குக் காரணம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2015-ல் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு நேபாளத்தைத் தாக்கிய மிக மோசமான பேரழிவு இதுவாகும்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்களைக் கண்டறியும் தேடுதல் பணியில் நேபாளம் மற்றும் சீனாவைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திபெத்தின் கைலாச யாத்திரை சென்ற நூற்றுக்கணக்கான இந்துகள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் ஏற்கனவே காணாமல் போனோர் பட்டியலில் உள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள நீர்மின் நிலைய ஊழியர்கள் 933 பேரையும் காணாமல் போனோர் பட்டியலில் நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் சேர்த்துள்ளது.

திரிசூலி ஆற்றுப் பள்ளத்தாக்கில் உள்ள சுரங்கங்களுக்குள் சிக்கிய சுமார் 350 தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 100 பேர் சிக்கியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

திரிசூலி 3A நீர்மின் திட்டப் பகுதியில் உள்ள சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்தவர்களை காப்பாற்றுவதற்கான நுழைவுப் பாதையைக் கண்டறியும் பணியில் நேபாள ராணுவம் ஈடுபட்டுள்ளது.

மிகவும் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், உயிர் பிழைத்தவர்களைச் சென்றடைய மீட்புக் குழுவினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

தலைநகர் காத்மாண்டுவில், காணாமல் போன தங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தேடி உறவினர்கள் மருத்துவமனைகளில் குவிந்துள்ளனர். சுவரொட்டிகளில் காணாமல் போனவர்களின் புகைப்படங்களும் பெயர்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக 977 பேர் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது 517 வெளிநாட்டினர் உட்பட 1,924 பேருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், 579 பேர் உயிரிழந்ததாகவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

நேபாளத்திலிருந்து பாயும் ஆறுகளில் இருந்து ஏழு உடல்களை மீட்டெடுத்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதற்கிடையே பனிக்கட்டி உடைந்து பெருக்கெடுத்தோடிய தண்ணீர் சேறும் சகதியுமாக ஆங்காங்கே பெரிய ஏரிகளையும் உருவாக்கியிருப்பது மீட்புக் குழுவினருக்கு நேரடி அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட கிரிசாங் (Gyirong) பகுதியில் மீட்புப் பணிகளைச் சீனா தற்காலிகமாக நிறுத்தி வைத்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக திபெத்தில் சிக்கியிருந்த 555 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 499 சீனக் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மீட்பு நடவடிக்கைகள் குறித்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய சீன அதிபர் ஜி ஜின்பிங், நேபாளத்தின் அவசரக்கால நடவடிக்கைகளுக்கு சீனாவின் உதவியையும் அறிவித்துள்ளார்.

Tags: nepal flood livenepal flood rescuenepal flood rainflood in nepalnepal flash floodnepal flood videonepal flood todaynepal flood alertnepal floodrasuwa nepal floodnepal floodsnepal flood updatenepal flood newsnepal flood damagenepal flood 2026nepal flood latest
Share
Tweet
SendShare
Previous Post

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

Next Post

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

Related News

நேபாள வெள்ளம் – அடையாளம் தெரியாத உடல்களின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்க முடிவு!

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் – மோகன் பாகவத்

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வங்கி லாக்கரில் இருந்து 93 லட்சம் கொள்ளை – 29 பேர் கைது!

சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்எல்ஏ-வின் பேச்சு : அதிமுக கண்டனம்!

4 நாள் அரசு முறைப்பயணம் – உஸ்பெகிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies