ஒரு கிலோ நெய் ரூ.4000 : ஏற்றுமதியில் சாதிக்கும் தெலங்கானா குக்கிராமம்!
Aug 15, 2025, 05:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஒரு கிலோ நெய் ரூ.4000 : ஏற்றுமதியில் சாதிக்கும் தெலங்கானா குக்கிராமம்!

Web Desk by Web Desk
Mar 17, 2025, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானாவில் பெரும் கடன்களால் போராடி கொண்டிருந்த ஒரு கிராமத்தின் விவசாயிகள் அனைவரும் தற்போது வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறியுள்ளனர். நெய் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் இந்த கிராமம் உலக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்த சாதனை சாத்தியமானது எப்படி? என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஹைதராபாத்திலிருந்து சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில், அனுமக்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமே ( Kummarigudem ) கும்மாரிகுடேம் கிராமம் ஆகும்.

இந்தக் கிராமத்தில் பெரும்பாலும் விவசாயிகளே வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் பாரம்பரிய விவசாயத்தையே செய்து வந்தனர். பல விவசாயிகள் எருமைகள் வைத்திருந்தனர். ஒரு மாதத்துக்கு 3,000 ரூபாய்க்கும் குறைவாகவே வருவாய் ஈட்டி வந்தனர்.

10 ஆண்டுகளுக்கு முன் பாரம்பரிய விவசாயத்தை நம்பியிருந்த காரணத்தால், இவர்களால், மிகக் குறைந்த வருமானத்தையே ஈட்ட முடிந்தது. அதிக வட்டிக்குச் சிறு சிறு நிதி நிறுவனங்களில் பெற்ற கடன்களைக் கூட திருப்பிச் செலுத்த முடியாமல் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதை இக்கிராமத்தில் பலர் வழக்கமாக கொண்டிருந்தனர். பிறகு, இயற்கை விவசாயத்துக்கு மாறி,பெற்ற கடனுக்கு வட்டி செலுத்தும் அளவுக்கு தங்கள் வருமானத்தை அதிகப் படுத்திக் கொண்டனர்.

இந்நிலையில், புட்டபர்த்தி சாய்பாபாவின் பக்தரும், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவருமான மோனிகா ரெட்டரிங், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவ முன்வந்தார்.

முதல் கட்டமாக, இக்கிராமத்தில் உள்ள 30 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, ஓவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பசு மாட்டை வழங்கினார். குஜராத்தில் இருந்து 30 ‘கிரி’ இன பசுக்களை நன்கொடையாக பெற்ற குடும்பங்கள், பால் விற்பனை மூலம் வருமானத்தை ஈட்டத் தொடங்கினார்கள்.

அடுத்த கட்டமாக, பால் சேகரிப்பு மற்றும் நெய் தயாரிக்கும் இயந்திரங்களை இக்கிராம விவசாயிகளுக்கு மோனிகா ரெட்டரிங் வழங்கினார். தற்போது, ​​இந்த கிராமத்தில், 70 குடும்பங்களில் கிட்டத்தட்ட 200 பசுக்கள் உள்ளன. ஒரு மாதத்துக்கு 1,500 லிட்டர் பால் மற்றும் 50 லிட்டர் நெய்யை உற்பத்தி செய்கிறார்கள்.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற வெளிநாடுகளுக்கு இங்கிருந்து நெய் ஏற்றுமதியாகின்றன. மீதமுள்ள நெய் ஹனுமகொண்டா, வாரங்கல் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவர்களுக்கு விற்கப்படுகிறது.

குறிப்பாக, ஒரு லிட்டர் பால் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில், ஒரு கிலோ சுத்தமான நெய் 4,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய பிற நெய் பிராண்டுகளின் சராசரி விலையை விட குறைந்தது ஐந்து மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.

நெய்யால், கிராமத்தின் முகமே மாறியுள்ளது. நெய், இக்கிராம மக்கள் அனைவரையும் கடன் பிடியில் இருந்து மீட்டுள்ளது. பசுக்களை வளர்க்கத் தொடங்கிய பிறகு, குடும்பத்தின் மாத வருமானம், 8,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. எந்தக் கடனும் இல்லாமல் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பதாகவும், கிராமமே செழிப்பாக இருப்பதாகவும் கிராம மக்கள் மகிழ்ச்சியோடு சொல்கிறார்கள்.

கும்மாரிகுடேம் கிராம மக்களால், “மேடம்” என்று அன்பாக அழைக்கப்படும் மோனிகா ரெட்டரிங்,கிராம மக்களின் மனநிறைவைப் பார்த்து, மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியிருக்கிறார்.

இயற்கை விவசாயத்திலும், பசும்பாலில் இருந்து தரமான தயாரிப்புகள் உற்பத்தியிலும், இந்த கிராமத்தின் வெற்றி, மற்றவர்களையும், தொழில் முனைவோராக மாற்றி வருகிறது.

இந்த கிராமத்தின் வெற்றி, இந்தியாவின் நிலையான விவசாய முறைகள் மற்றும் கிராமப்புற வளர்ச்சியின் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாகும்.

Tags: Rs. 4000 per kilo of ghee: A Telangana hamlet that excels in exports!ஒரு கிலோ நெய் ரூ.4000தெலங்கானா
ShareTweetSendShare
Previous Post

பாஜகவினர் கைது – எல்.முருகன் கண்டனம்!

Next Post

 தமிழக பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் கைதுக்கு எச். ராஜா கடும் கண்டனம்!

Related News

79-வது சுதந்திர தினம் : தேசியக் கொடியை ஏற்றிய மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி!

ஹைதராபாத்தில் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது!

தேசியக் கொடியை ஏற்றிய முதலமைச்சர் ரங்கசாமி!

ஜம்மு காஷ்மீர் : கிஷ்துவார் மாவட்டத்தில் மேக வெடிப்பு!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

பெற்றோரிடம் பாசம் காட்டினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு – பாசமழை பொழிந்துள்ள அசாம் அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

79-வது சுதந்திர தினம் : மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாகை : தரமற்ற படகுகளை வழங்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

சிரியாவில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத்தீ!

நடிகர் ரஜினிகாந்த் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வைரல்!

ஊராட்சி மன்ற தலைவரின் குடும்பத்தினருக்கு கஞ்சா வியாபாரி கொலை மிரட்டல்!

சென்னை தலைமை செயலகத்தில் சுதந்திர தின விழா : பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது!

’தலைவன் தலைவி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சீனா : யாங் லியு புயலால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நகரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies