ஹோர்முஸ் நீரிணையில் நீடிக்கும் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 2 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் தொடர்ச்சியான பதற்றம் காரணமாக சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.
பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 1.7 சதவீதம் உயர்ந்து, ஒரு பேரல் 110.72 டாலராக வர்த்தகமானது. அதேபோல், அமெரிக்க WTI கச்சா எண்ணெய் விலை 2.1 சதவீதம் உயர்ந்து, ஒரு பேரல் 107.62 டாலராக உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு புதிய எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, பதற்றம் மேலும் அதிகரித்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
















