நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வில் சுமார் 23 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
கடந்த மே மாதம் 3ம் தேதி நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த தேர்வை மத்திய அரசு ரத்து செய்து மீண்டும் மறு தேர்வு நடத்த உத்தரவிட்டது. அதன்படி நாடு முழுவதும் 551 நகரங்களில் நீட் மறு தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
5 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மையங்களில் சுமார் 23 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். . தமிழகத்தில் 307 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் நீட் மறு தேர்வு எழுதினர். . சென்னையில் மட்டும் 43 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தேர்வு மையத்திற்குள் பிற்பகல் 1.30 மணி வரை மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தேர்வு எழுத வந்த மாணவர்கள் கடுமையான சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு, மாலை 5.15 மணிக்கு முடிவடைந்தது.
















