ரூ.340 கோடிக்கு 'நோ' சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் - சிறப்பு தொகுப்பு!
Aug 6, 2026, 11:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 22, 2026, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவருமான எலான் மஸ்க் உடனான நட்பை ரகசியமாக வைத்திருக்க தனக்கு 340 கோடி ரூபாய் வழங்க முன்வந்ததாகவும், அதைத் தாம் நிராகரித்து விட்டதாகவும் அவரது முன்னாள் காதலி ஆஷ்லி செயிண்ட் கிளேர் கூறியிருப்பது சர்வதேச அளவில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இருவருக்கும் இடையே என்ன நடந்தது? பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்…

அமெரிக்க அரசியல் விமர்சகரும், சமூக வலைதள பிரபலமுமான ஆஷ்லி செயிண்ட் கிளேர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தொழிலதிபர் எலான் மஸ்க் உடனான தனது நட்பு மற்றும் அதனைச் சுற்றிய சர்ச்சை குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார்…

தனக்கும் எலான் மஸ்க்கும் பிறந்த குழந்தை குறித்து வெளியே பேசக்கூடாது என்பதற்காக மிகப் பெரிய தொகை, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 340 கோடி ரூபாய் வரை வழங்க எலான் மஸ்க் முன்வந்ததாக அவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில், முதலில் வீடு வாங்கவும் எதிர்கால செலவுகளுக்காகவும் 15 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று எலான் மஸ்க் தரப்பில் கூறப்பட்டதாகவும், பின்னர் மாதந்தோறும் ஒரு லட்சம் டாலர் வீதம் 20 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டதாகவும் ஆஷ்லி தெரிவித்துள்ளார்…

ஆனால், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து விட்டதாக கூறியுள்ள ஆஷ்லி, எலான் மஸ்க் பற்றியோ, அவரது நிறுவனங்கள் பற்றியோ எதையும் பேசக்கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்…

இதற்கு தன்னுடைய மனசாட்சி ஒப்புக் கொள்ளவில்லை என்றும், பணத்திற்காக அமைதியாக இருக்க முடியாது என்றும் கூறிய அவர், தேவைப்பட்டால் தன் குழந்தைகளுடன் ஒரு சிறிய அறையில் கூட வாழத் தயார் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆஷ்லியின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சர்வதேச அளவில் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

கடந்த ஆண்டு எலான் மஸ்க்கின் குழந்தைக்கு தாயாக இருப்பதாக ஆஷ்லி செயிண்ட் கிளேர் பொதுவெளியில் அறிவித்திருந்தார். அதன் பின்னர் இருவருக்கும் இடையே சட்டரீதியான பிரச்னை உருவானதாக கூறப்படுகிறது…

குழந்தை பராமரிப்பு தொகை, குழந்தையின் பாதுகாப்பு உரிமை மற்றும் பல்வேறு தனிப்பட்ட விவகாரங்கள் தொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன…

இந்த விவகாரத்தில் எலான் மஸ்க் தரப்பில் அதிகாரப்பூர்வ பதில் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், ஆஷ்லியின் குற்றச்சாட்டுகள் அமெரிக்க ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன…

உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் தனிப்பட்ட வாழ்க்கை மீண்டும் ஒரு முறை சர்வதேச அளவில் டிரெண்டாகியுள்ளது. இந்த விவகாரத்திற்கு எலான் மஸ்க் தரப்பில் பதில் வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…

Tags: St. ClairteslaElon muskSpaceXAshley St. Clair
Share
Tweet
SendShare
Previous Post

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

Next Post

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies