பின்னணி பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அம்மாவின் மறைவு, இசை மற்றும் கலாச்சார உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு மொழிகளில் அவர் பாடிய பாடல்கள் பல தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை என்று சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மோடி,
இணையற்ற நளினத்துடனும் பன்முகத்தன்மையுடனும் ஒவ்வொரு உணர்வையும் எஸ். ஜானகி தன்னுடைய குரல்வளம் மூலம் வெளிப்படுத்தியதாக புகழாரம் சூட்டியுள்ளார்.
பின்னணி பாடகி எஸ். ஜானகியின் இனிமையான பாடல்கள் வருங்காலத்திலும் கேட்போரை மெய்சிலிர்க்க வைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
துயரமான இத்தருணத்தில், பின்னணி பாடகி எஸ். ஜானகியின் குடும்பத்தினர், எண்ணற்ற ரசிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த இசைச் சமூகத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
















