காவிரி நீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயும், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி சந்திக்க உள்ளனர்.
மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இருப்பு இல்லாததால் நடப்பாண்டில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
அதே நேரத்தில், தமிழ்நாட்டிற்கு காவிரியில் திறக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
மேலும் காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் சிவகுமாரை சந்திக்க நேரம் கேட்டு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.
அதன்படி இருமாநில முதலமைச்சர்களும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த சந்திப்பில், காவிரி நீர் பங்கீடு, மேகதாது அணை விவகாரம் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















