இந்திய இரயில்வேயின் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய புறநகர் ரயில் பெட்டிகளுக்கு பயணிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
ஏப்ரல் 2023 முதல் ஜூன் 2023 வரை மத்திய இரயில்வேயின் குளிர்சாதன வசதியுடன் கூடிய இரயில் பெட்டிகளில் 49.47 லட்சம் பயணியர் பயணம் செய்ததன் மூலம் ரூ. 23.36 கோடி வருவாய் கிடைத்ததுள்ளது.
2022-23ம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை பயணம் செய்த மொத்த பயணிகளின் எண்ணிக்கை 26.60 லட்சமாக இருந்த நிலையில், 2023 – 2024-ம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை 53.77 சதவீதம் அதிகரித்து 49.47 லட்சமாக பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது .
2022-23ம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை 12.16 கோடி ரூபாய் வருவாய் கிடைத்த நிலையில், 2023 – 2024-ம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை 52.05 சதவீதம் அதிகரித்து 23.36 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது .
2022-23ம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை ஒவ்வொரு மாதமும் சராசரியாக 8.86 லட்சம் பேர் பயணம் செய்த நிலையில், 2023 – 2024-ம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை ஒவ்வொரு மாதமும் 16.49 லட்சம் பேர் பயணம் செய்தனர். இது 53.73 சதவிதம் அதிகமாகும். 2022 – 2023-ம் ஆண்டு ஜூன் வரை ஒவ்வொரு மாதமும் 4.05 கோடி ரூபாய் வருவாய் கிடைத்த நிலையில், 2023- 2024-ம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை ஒவ்வொரு மாதமும் 7.78 கோடி ரூபாய் ஈட்டப்பட்டது. இது 52.06 சதவீதம் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.