25 ஆவது ஆசிய தடகள சாம்பியன் சிஷிப் போட்டி தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் நடைபெற்றது. நேற்றுடன் நிறைவடைந்த இந்த போட்டியில் இந்தியா 27பதக்கங்களை வென்றுள்ளது. இதில் இந்திய தடகள வீரர்கள் 6 தங்கம், 12 வெள்ளி மற்றும் 9 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
வெளிநாட்டு மண்ணில் சிறந்து விளங்கி சாதனை புரிந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, “சிறந்த செயல்திறன்கொண்டு விளையாடி, 25-வது ஆசிய தடகள சாம்பியன் ஷிப் போட்டியில் 27 பதக்கங்களை வென்று அசதியுள்ள இந்திய வீரர்களுக்கு என்னுடைய மனமார்த வாழ்த்துக்கள் என்றும், இது நம் தேசத்திற்கு கிடைத்த பெருமை என்றும், தனது டிவிட்டர் பக்கதில் தெரிவிதுள்ளார் .
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி மொத்தம் 27 பதக்கங்களை வென்று 3ஆம் இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தை ஜப்பான் அணியும் , இரண்டாவது இடத்தை சீனாவும் பிடித்திருக்கின்றன.