சென்னை காவேரி மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (ஜூலை 17) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் புழல் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
புழல் சிறையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு, விசாரணை கைதி எண் 001440 ஒதுக்கப்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.