சென்னையில் தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்புடைய மூன்று இடங்களில் அமலாகத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர் இஸ்மாயில் அஸ்கர்(60), துடைப்பம் மொத்த வியாபாரி, விடியல் புத்தகத்தின் ஆசிரியர் ஆகியோர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைநடத்தி வருகிறார்கள்.
சென்னை பெரியமேட்டில் உள்ள பேரக்ஸ் சாலை உள்ள அலுவலகம், மற்றும் ஜோதி வெங்கடாசலம் சாலையில் உள்ள வீட்டிலும் இன்று காலை 9.55 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர் இஸ்மாயில் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய காவல் துறையினரின் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.