மணிப்பூர் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து 6 வது நாளாக இன்றும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.
மாநிலங்கள் அவையில் இன்று காலை கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள், இந்தியா, இந்தியா என கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
பாஜக உறுப்பினர்களும் பதிலுக்கு மோடி, மோடி என்று பலத்த முழக்கங்கள் எழுப்பினார்கள். மேலும் எதிர்கட்சியினர் மக்களவை சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மதியம் 2 மணி வரை மக்களவையை ஒத்தி வைத்தார். மணிப்பூர் சம்பவம் தொடர்பாக பிரதமர் விளக்கமளிக்கக் கோரி எதிர்கட்சிகள் மாநிலங்கள் அவையிலும் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து மாநிலங்கள் அவையும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கூட்டணிக்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கருப்பு உடை அணிந்து வந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.