ஹோட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான LPG சிலிண்டர் விநியோகம் மீதான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு உடனடியாக நீக்கியுள்ளது.
மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் தணிந்து, கச்சா எண்ணெய் விலை போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பியுள்ளது.
இதனால், வணிக எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகளை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் நீக்கியுள்ளது.
உள்நாட்டு எரிவாயு உற்பத்தி அதிகரிப்பு மற்றும் சீரான இறக்குமதியைத் தொடர்ந்து, பெரிய தொழிற்சாலைகளுக்கான விநியோகம் 50 சதவீதம் வரை தளர்த்தப்பட்டுள்ளது.
அதேநேரம், பெட்ரோகெமிக்கல் துறைக்கான பயன்பாடு அதிகரித்தாலும், நாட்டின் தினசரி உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி 40 டிஎம்டி என்ற அளவிற்குக் குறையாமல் பராமரிக்கப்பட வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு நிபந்தனை விதித்துள்ளது.
மேலும், PNG எனப்படும் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு உள்ள பகுதிகளில் வணிக நுகர்வோரைப் படிப்படியாகப் பிஎன்ஜி முறைக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
















