சைவ, வைணவ பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சைவ, வைணவ பெண்கள் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் அளித்த நிலையில் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இதை எதிர்த்து, பொன்முடி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, அரசின் அனுமதியின்றி வழக்கு தொடரப்பட்டதால், அதை விசாரிக்க முடியாது என பொன்முடி தரப்பில் வாதிடப்பட்டது.
அதேவேளையில், தனது கருத்து ஊடகங்களில் பரவும், பிற மதத்தினர் பார்ப்பார்கள் என்று தெரிந்தே பொன்முடி பேசியதாக புகார்தாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், பொன்முடியின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
















