வரும் பாராளுமன்றத் தேர்தலில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை அலைக்கழிக்கும் திமுக காங்கிரஸ் ஊழல் கூட்டணியை மக்கள் மொத்தமாகப் புறக்கணித்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி தொடர தமிழகம் முழுவதும் வாக்களிப்பார்கள் என்பது உறுதி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பதிவில்,
இன்றைய என் மனம் என் மக்கள் பயணம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது பேரன்பு கொண்ட தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மக்கள் மத்தியில் சிறப்பாக நடந்தேறியது.
1967 – 68 திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டிய ராக்கெட் ஏவுதளம், தற்போது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ஆட்சியில் வரவிருக்கிறது. விஞ்ஞானி சதீஷ் தவான் அவர்களிடம், அன்றைய அமைச்சர் மதியழகன் எப்படி நடந்து கொண்டார் என்பதை, புகழ்பெற்ற விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்கள், தனது சுய சரிதையில் எழுதியிருக்கிறார். அன்றிலிருந்து இன்று வரை, திமுகவின் ஊழலும், தேச விரோதப் போக்கும், மாறவே இல்லை.
இன்றைய #EnMannEnMakkal பயணம், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் மீது பேரன்பு கொண்ட தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மக்கள் மத்தியில் சிறப்பாக நடந்தேறியது.
1967 – 68 திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டிய ராக்கெட் ஏவுதளம், தற்போது பாரதப்… pic.twitter.com/EzRYBvAUpP
— K.Annamalai (@annamalai_k) August 12, 2023
பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உடைய விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து, ஆலயப் பணிகளை முடக்க முயற்சிக்கிறது அறமற்ற இந்து சமய அறநிலையத் துறை. தமிழகம் முழுவதும் ஆலயங்களுக்குச் சொந்தமான நிலங்கள், திமுகவினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
குடி நீர் பிரச்சினை, காற்றாலை கமிஷன், மது விற்பனை கமிஷன் என தொகுதி எம்எல்ஏ சின்ன செந்தில் பாலாஜி ஆடாத ஆட்டமே இல்லை. விரைவில் மக்கள் திமுகவினர் ஆட்டத்துக்கு முடிவுரை எழுதுவார்கள்.
மோடியின் முகவரி : விளாத்திகுளம்
மத்திய அரசின் முத்ரா கடனுதவியின் மூலம் தொழில் முனைவராகியிருக்கும் சத்திய சுகுமார், தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கழிப்பறை வசதி பெற்றுள்ள திருமதி முத்தம்மாள், சுவாநிதி திட்டத்தில் பலனடைந்த திரு நாராயணன், செல்வமகள் திட்டத்தின் மூலம் பயனடைந்த செல்வி ஈஸ்வரி. இவர்கள்தான் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முகவரி.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை அலைக்கழிக்கும் திமுக காங்கிரஸ் ஊழல் கூட்டணியை மக்கள் மொத்தமாகப் புறக்கணித்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி தொடர தமிழகம் முழுவதும் வாக்களிப்பார்கள் என்பது உறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.