நமது நாடு புதிய உச்சத்தைக் காண்பது உறுதி: பிரதமர் மோடி!
Jun 24, 2026, 09:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நமது நாடு புதிய உச்சத்தைக் காண்பது உறுதி: பிரதமர் மோடி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 15, 2023, 12:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நமது இன்றைய நடவடிக்கைகள் 1,000 ஆண்டுகள் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியாவின் திறன் மற்றும் சாத்தியக் கூறுகளால் நமது நாடு புதிய உச்சத்தைக் காண்பது உறுதி என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ணக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “இன்று நம்மிடம் இருக்கும் ஜனநாயகம், மக்கள்தொகை, பன்முகத்தன்மை ஆகியவை தேசத்தின் கனவுகளை நனவாக்கும் திறன் கொண்டவை. நான் கடந்த 1,000 ஆண்டுகளைப் பற்றிப் பேசுகிறேன். ஏனெனில் நமது நாட்டுக்கு இன்னொரு வாய்ப்பு இருப்பதை நான் காண்கிறேன்.

ஆகவே, இந்தக் காலகட்டத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்தே அந்த வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, நாம் நமது அடிகளைக் கவனமாக முன்வைக்க வேண்டும். ஒன்றன்பின் ஒன்றாக நாம் எடுத்து வைக்கும் அடிகள் 1,000 ஆண்டுகளுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். இந்த நாட்டில் வாய்ப்புகளுக்குப் பஞ்சமில்லை. வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மேலும், முடிவில்லாத வாய்ப்புகளை வழங்கும் திறன் நமது நாட்டிற்கு உண்டு,

இந்தியாவின் திறன் மற்றும் சாத்தியக் கூறுகளால் நமது நாடு புதிய உச்சத்தைக் காண்பது உறுதி. இதன் காரணமாகவே, ஜி20 உச்சி மாநாட்டை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது. மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஜி20 அமைப்பின் நிகழ்வுகள் நடந்த விதம், நமது நாட்டிலுள்ள எளிய மக்களின் திறனையும், பன்முகத்தன்மையையும் உலகிற்கு உணர்த்தி இருக்கிறது.

இந்தியா தற்போது நவீனத்துவத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கிராமங்களிலுள்ள விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, உலக அரங்கிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். தற்போது உலகின் நிலைத்தன்மைக்கு இந்தியாதான் காரணமாக இருக்கிறது. மேலும், உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களாக நாம் உருவாகி இருக்கிறோம். ஆகவே, இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

Tags: PM ModiModipm narendra modi speechNotional Flag
ShareTweetSendShare
Previous Post

அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Next Post

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து

Related News

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies