அறக்கட்டளைக்குத் தானமாக வழங்கப்பட்ட சொத்துகளைத் தனி நபர்களின் பெயர்களில் மாற்ற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Sep 10, 2026, 09:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அறக்கட்டளைக்குத் தானமாக வழங்கப்பட்ட சொத்துகளைத் தனி நபர்களின் பெயர்களில் மாற்ற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Murugesan M by Murugesan M
Aug 17, 2023, 11:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அறக்கட்டளைக்காக தானமாக வழங்கப்பட்ட சொத்துகளைத் தனி நபர்களின் பெயர்களில் மாற்ற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த நெமிலியில் உள்ள தன்னுடைய சொத்துகளுக்கு ஆளவந்தார் அறக்கட்டளை பெயரில் பட்டா வழங்கப்பட்டு உள்ளதாக கூறி, அந்த பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என கே.எம்.சாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆளவந்தார் தனது சகோதரர் மகன் முத்துகிருஷ்ணனுக்கு எழுதிவைத்த சொத்துகளில் சிலவற்றை, அவரது உறவினரான தனக்கு எழுதிவைத்திருந்ததாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே அந்தச் சொத்துகளை ஆளவந்தார் அறக்கட்டளை பெயருக்கு அதன் நிர்வாகிகள் மாற்றிவிட்டதால், சொத்துக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் கோரியிருக்கிறார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, முத்துகிருஷ்ணனின் இறப்புச் சான்று போலியானது என்று கூறி, இது தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும், ஆளவந்தாரால் கோவில்களுக்கு எழுதிவைக்கப்பட்ட சொத்துகளின் விவரங்களும் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

முத்துகிருஷ்ணன் 1997ஆம் ஆண்டில் இறந்ததாக மனுதாரரும், 1936ஆம் ஆண்டிலேயே இறந்துவிட்டதாக அரசு தரப்பிலும் கூறப்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, எந்த இறப்பு சான்று உண்மையானது என கண்டறிவதற்காக, காவல்துறையிடம் புகார் அளிக்கும்படி உயர் நீதிமன்றத் தலைமை பதிவாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், 1943ஆம் ஆண்டு முத்துக்கிருஷ்ணன் மகன் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது, மனுதாரர் கே.எம்.சாமி தாக்கல் செய்த இறப்பு சான்று உண்மையாக இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

போலிச்  சான்றை உருவாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, ஆளவந்தார் அறக்கட்டளை சொத்துக்களை நிர்வகிப்பதற்கான மேலாளராகவே முத்துக்கிருஷ்ணன் நியமிக்கப்பட்டதாகவும், அவரது மறைவிற்கு பிறகு அந்த சொத்துகளை உரிமை கொண்டாட யாருக்கும் உரிமையில்லை என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

அறக்கட்டளைக்காக தானமாக வழங்கப்பட்ட சொத்துகளை தனி நபர்களின் பெயர்களில் மாற்ற முடியாது என கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலங்களைக் கண்டறிந்து, அதிலுள்ள ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற நடவடிக்கையை நான்கு வாரங்களில் முடிக்க வேண்டுமென அறநிலையத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அறக்கட்டளை சொத்துகளில் இருந்து ஈட்டப்படும் வருமானத்தை, எந்த நோக்கத்திற்கான அறக்கட்டளை துவங்கப்பட்டதோ, அதற்காக செலவிட வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

Tags: chennai high court
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்பு!

Next Post

100 சதவீத மத்திய அரசு நிதியுதவியுடன் இந்திய இரயில்வே துறை புதிய  திட்டங்களுக்கு  மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies