டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்திய ரயில்வே துறையில் 100 சதவீத மத்திய அரசு நிதியுதவியுடன் சுமார் 32,500 கோடி ரூபாய் செலவில் மொத்தம் 2,339 கி.மீ. தூரத்திற்கான 7 பல வழித்தட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டங்களால் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு அடையும். எனவே நாட்டு மக்களுக்கு இரயில் பயணங்கள் எளிமையாகும்.
உத்தரப்பிரதேசம், பீகார், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, ஜார்கண்ட், மேற்குவங்கம் என 9 மாநிலங்களில் உள்ள 35 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த திட்டங்களால் இந்திய இரயில்வே துறையில் தற்போதுள்ள இரயில் பாதை கட்டமைப்பில் 2339 கி.மீ. தூரம் அதிகரிக்குப் படும். இந்தத் திட்டங்களால் இம்மாநிலங்களில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பும் பெருமளவில் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. .