இந்திய கொரோனா தடுப்பூசியால் ஆபத்தில்லை - ஆய்வு முடிவு
Jun 23, 2026, 08:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்திய கொரோனா தடுப்பூசியால் ஆபத்தில்லை – ஆய்வு முடிவு

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 5, 2023, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமீபக் காலமாக இந்திய கரோனா (Corona) தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படும் என்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வந்தன. ஆனால், இந்திய கரோனா தடுப்பூசிகளால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து இல்லை என ஆய்வின் முடிவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ‘ப்ளோஸ் ஒன்’ (Plos One) இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவிஷீல்டு (Covishield) மற்றும் கோவாக்சின்(covaxin) தடுப்பூசிக்கும், மாரடைப்புக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டில்லி ஜி.பி.பந்த் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2021 மற்றும் ஆகஸ்ட் 2022 இடைப்பட்ட காலத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 1,578 பேரின் தரவுகளைக் கொண்டு இந்த ஆய்வு நடைபெற்றன.

இதில், 1,086 போ் தடுப்பூசி செலுத்தியவர்கள். மீதமுள்ள 492 போ் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள். மேலும், 1047 போ் 2 தவணை தடுப்பூசிகளையும், 39 போ் முதல் தவணைத் தடுப்பூசி மட்டும் செலுத்திக் கொண்டவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நோயாளிகளிடம், அவர்கள் செலுத்திக் கொண்ட தடுப்பூசி வகை, தடுப்பூசி செலுத்திய தேதி மற்றும் அதன் பின்விளைவுகள் உள்ளிட்ட தரவுகள் பெறப்பட்டன. இதனடிப்படையில், நடத்திய ஆய்வின் முடிவில், கரோனா (Corona) தடுப்பூசிகளுக்கும் மாரடைப்புக்கும் எந்த தொடர்புமில்லை என உறுதிப்படுத்தப்பட்டது.

முதலில் 30 நாட்களும் பின்னர் 6 மாதங்களும் என நடத்தப்பட்ட 2 ஆய்விலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களே குறைவாக உயிரிழந்தது கண்டறியப்பட்டது.

ஆய்வுக்குத் தலைமை தாங்கிய ஜி.பி. பந்த் மருத்துவமனையின் மோஹித் குப்தா கூறுகையில், ‘இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகள் பாதுகாப்பானவை, கரோனா தடுப்பூசிகளுக்கும் மாரடைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, உண்மையில் தடுப்பூசி செலுத்திய பிறகு உயிரிழப்பு அச்சுறுத்தல் வாய்ப்புகள் குறைவாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது’ என்று கூறினார்.

Tags: covaxinCovishield
ShareTweetSendShare
Previous Post

இடைக்காலப் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடக்கம்!

Next Post

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies