நியூ ஜெர்சியில் அக்ஷர்தாம் கோவில் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!
Sep 1, 2026, 05:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நியூ ஜெர்சியில் அக்ஷர்தாம் கோவில் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Oct 3, 2023, 04:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நியூ ஜெர்சியில் அக்ஷர்தாம் கோவில் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோவில் நவீன காலத்தில் இந்தியாவிற்கு வெளியே நியூ ஜெர்சியில் கையால் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இந்து கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது.

நியூஜெர்சியில் ராபின்ஸ்வில்லே என்ற இடத்தில் அசுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோவில், கம்போடியாவில் அமைந்திருக்கும் அங்கோர் வாட் கோவிலுக்குப் பின்னர் உலகின் இரண்டாவது மிகப்பெரிய கோவிலாகஇக்கோவில் கருதப்படுகிறது.

நியூஜெர்சியில் சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோவில் அக்டோபர் 8ஆம் தேதி  திறந்து வைக்கப்படுகிறது. இதையடுத்து அக்டோபர் 18ஆம் தேதி முதல் பக்தர்கள் வழிபாடுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இக்கோயில் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி  கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  வெளியிட்டுள்ள கடிதத்தில் ”கோயில்கள் பல நூற்றாண்டுகளாக சேவை மற்றும் சமூக-கலாச்சார நடவடிக்கைகளின் மையமாக இருந்து வருகின்றன. அவை பக்தி மையங்கள் மட்டுமல்ல, கலை, கட்டிடக்கலை ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கான தளங்களாகவும் செயல்படுகின்றன. இத்தகைய ஆழமான கலாச்சாரக் கோட்பாடுகள் மனிதகுலத்தை வழிநடத்தி வருகின்றன.

தலைமுறைகளாக அக்ஷர்தாம் கோவில் தொடக்க கொண்டாட்டங்கள் இந்தியாவின் கட்டிடக்கலை, புகழ்பெற்ற பண்டைய கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்தப் பணியில் ஈடுபட்டு இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள பரந்த அளவிலான பக்தர்களுக்கு இது ஆழ்ந்த ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாகும்.

கோயில்கள் பல நூற்றாண்டுகளாக சேவை மற்றும் சமூக-கலாச்சார நடவடிக்கைகளின் மையமாக இருப்பதைக் குறிப்பிட்ட அவர், அவை பக்தி மையங்கள் மட்டுமல்ல, கலை, கட்டிடக்கலை சிறப்பு, இலக்கியம் மற்றும் அறிவு ஆகியவற்றை வெளிப்படுத்தும் தளங்களாகவும் செயல்படுகின்றன என்றார். இத்தகைய ஆழமான கலாச்சாரக் கோட்பாடுகள் தலைமுறை தலைமுறையாக மனிதகுலத்தை வழிநடத்தி வருகின்றன.

இந்தியாவும் அமெரிக்காவும் நிலையான உறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும், இரு நாடுகளும் இந்த உறவுகளை வலுவான, பன்முக உறவுகளாக வளர்த்து, விரிவுபடுத்தி, தங்கள் மக்களிடையே விரிவான தொடர்புகளை வளர்த்து வருவதாக  தெரிவித்துள்ளார்.

Tags: PM ModiAkshardham in New Jersey
Share
Tweet
SendShare
Previous Post

ஊழல் காங்கிரஸ் அரசால் மக்கள் சலிப்பு: பிரதமர் மோடி!

Next Post

அனைத்துத் தூதரக அதிகாரிகளையும் திரும்பப் பெற கனடாவுக்கு இந்தியா உத்தரவு!

Related News

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies