ஊழல் காங்கிரஸ் அரசால் மக்கள் சலிப்பு: பிரதமர் மோடி!
Sep 12, 2026, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல் காங்கிரஸ் அரசால் மக்கள் சலிப்பு: பிரதமர் மோடி!

மாநிலத்தின் வளர்ச்சி போஸ்டரில் மட்டுமே தெரிவதாகவும் குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 3, 2023, 04:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலத்தில் 27,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஊழல் காங்கிரஸ் அரசால் மாநில மக்கள் சலிப்படைந்து விட்டார்கள். மாநிலத்தின் வளர்ச்சி போஸ்டர்களில் மட்டுமே தெரிகிறது என்று காங்கிரஸ் அரசை கடுமையாகத் தாக்கி பேசியிருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, 27,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், நாகர்நாரில் 23,800 கோடி ரூபாய் கட்டப்பட்ட எஃகு ஆலையையும் திறந்து வைத்தார். தொடர்ந்து, ஜக்தல்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “சத்தீஸ்கர் மாநில மக்களுக்கு மோசடி மற்றும் ஊழல் அரசாங்கத்தை காங்கிரஸ் கொடுத்திருக்கிறது. ஊழலும், குற்றங்களுமே அதிகமாக உள்ளன.

மாநிலத்தின் வளர்ச்சி போஸ்டர்களில் மட்டுமே தெரிகிறது. இதனால் மக்கள் சலிப்படைந்து விட்டார்கள். மேலும், மாநிலத்தின் நிலைமையையும் காங்கிரஸ் அரசு சீரழித்து விட்டது. சில சமயங்களில் ராஜஸ்தான் மாநிலத்தைப் போலவும் தெரிகிறது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் குற்ற விகிதத்தில் போட்டி போடுகின்றன. ஆகவே, மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். காங்கிரஸ் கட்சியினர் உருக்கு ஆலையைக் கைப்பற்றி, அதன் மூலம் நிறைய சம்பாதிக்க நினைக்கிறார்கள். இந்த எஃகு ஆலை பஸ்தார் மக்களுக்கு மட்டுமே சொந்தமானது. இதை காங்கிரஸ் கட்சியினரை கைப்பற்ற விடமாட்டேன்.

இந்த உருக்குத் தொழிற்சாலையின் மூலம் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இங்கு மேலும் சில எஃகு தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். எதிர்வரும் ஆண்டுகளில் நாடு முழுவதிலும் இருந்து இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காக பஸ்தாருக்கு வருவார்கள். காங்கிரஸ் கட்சி பஸ்தர் பகுதியை பல ஆண்டுகளாக புறக்கணித்து வந்தது. காங்கிரஸ் ஒருபோதும் மக்களின் நலன்களைப் பற்றி சிந்தித்ததில்லை. இங்கு பா.ஜ.க. பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளது. குறிப்பாக, பழங்குடியின மக்களுக்கு காங்கிரஸை விட பா.ஜ.க. 5 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது.

மாநிலத்தில் காங்கிரஸ் உட்கட்சி பூசலை எதிர்கொண்டிருக்கிறது. இதற்குப் பின்னால் 2 காரணங்கள் உள்ளன. முதலாவதாக, அரசாங்கத்தை காப்பாற்றுவதில் மும்முரமாக இருப்பதால், மக்கள் பணிகளில் கவனம் செலுத்த நேரம் இல்லை. இரண்டாவதாக, மோடி. எந்த ஊழல்வாதியும் மோடியை கண்களால் பார்க்க முடியாது” என்றார்.

Tags: PM ModiChhattisgarh
Share
Tweet
SendShare
Previous Post

நியூ ஜெர்சியில் பிரம்மாண்டத் திருக்கோவில்.

Next Post

நியூ ஜெர்சியில் அக்ஷர்தாம் கோவில் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies