அருந்ததி ராய் மீது வழக்கு - டெல்லி துணை நிலை ஆளுநர் அனுமதி!
Aug 8, 2026, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அருந்ததி ராய் மீது வழக்கு – டெல்லி துணை நிலை ஆளுநர் அனுமதி!

Murugesan M by Murugesan M
Oct 11, 2023, 02:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லி துணை நிலை ஆளுநர் அனுமதி அளித்தன் பேரில், சர்ச்சை எழுத்தாளாளர் அருந்ததி ராய் மற்றும் முன்னாள் பேராசிரியர் ஷேக் ஷோகத் ஹுசைன் ஆகியோருக்கு எதிராக, தேசத்துரோகம் உள்பட சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967 இன் பிரிவு 13 -ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுஷில் பண்டிட் கடந்த 2010 -ம் ஆண்டு அக்டோபர் 28 -ம் தேதி, திலக்மார்க் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அக்டோபர் 21 -ம் தேதி அன்று ‘Azadi – The Only Way’ எனும் தலைப்பில் மாநாடு நடைபெற்றது.

இதில், சர்ச்சை எழுத்தாளாளர் அருந்ததி ராய், முன்னாள் பேராசிரியர் ஹூசைன், சையத் அலி ஷா கிலானி மற்றும் வரவர ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் அவர்கள் பேசுகையில், இந்தியாவின் பகுதியாகக் காஷ்மீர் ஒருபோதும் இருந்தது இல்லை என்றனர். மேலும், ஆயுதப்படைகளால் ஜம்மு – காஷ்மீர் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டது, எனவே, ஜம்மு – காஷ்மீர் மாநிலம் சுதந்திரம் பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் வெறுப்பு பேச்சை விதைத்திருந்தனர்.

இந்த நிலையில், இது தொடர்பாகப் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில், தேசத்துரோகம் உள்பட சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967 இன் பிரிவு 13 -ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த தொடர்பாக டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அனுமதி அளித்துள்ளார். அதன் பேரில், அருந்ததி ராய் மற்றும் முன்னாள் பேராசிரியர் ஷேக் ஷோகத் ஹுசைன் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், தேசிய ஒருமைப்பாட்டுக் குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ், அதாவது 153 ஏ, 153 பி, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Case against Arundhati Roy - Delhi Deputy Governor allowed!Case against Arundhati Roy
Share
Tweet
SendShare
Previous Post

கர்நாடகாவிற்கு கடத்திய 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் – லாரி ஓட்டுநர் கைது!

Next Post

லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்த நாள் – பிரதமர் மோடி மரியாதை!

Related News

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்!

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் – திமுக புறக்கணிப்பு!

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies