பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா!
May 7, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா!

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 14, 2023, 02:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி கொண்டிருக்கும் எம்பெருமான் ஆதி கேசவ பெருமானின் திருவடிகளை வட்டமிட்டு பரளியாறு ஓடுவதால் இந்த ஊா் திருவட்டாறு என்ற சிறப்பு பெயரில் அழைக்கப்படுகிறது. இப்படிச் சிறப்பு வாய்ந்த ஊரில், திருவட்டாறு பகுதியில் அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் அமைந்துள்ளது.

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் மிகவும் பழைமையான வைணவக் திருக்கோயிலாகும். இது 108 வைணவத் திருத்தலங்களுள் 76 ஆவதாகப் போற்றப்படுகிறது. மேலும், இது 13 மலை நாட்டுத் திருத்தலங்களுள் ஒன்றாகவும் வணங்கப்படுகிறது.

ஆதிசேடனைப் படுக்கையாகக் கொண்டு அறிதுயிலில் ஆழ்ந்துள்ள பெருமாளின் திருமேனி 22 அடி நீளம் உடையது. இது 16,008 சாளக்கிராமக் கற்களைக் கொண்டு செய்யப்பட்ட சடுசக்கரை படிமமாகும். கருவறையில், திருமுகம், திருக்கரம், திருப்பாதம் எனும் 3 நிலைவாசல்கள் உள்ளன. இக்கோயிலின் பிரதான வாயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

இப்படிச் சிறப்பு வாய்ந்த திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஐப்பசித் திருவிழா 14 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

காலையில் நிர்மாலியம், ஸ்ரீபூத பலியைத் தொடர்ந்து, திருக்கொடியேற்றப்படுகிறது. இரவில் சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வரும் நிகழ்வு நடைபெறுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த திருக்கோவிலில் நுழையும் ஆண்கள் அனைவரும் இறைவனுக்கு மரியாதை தரும் வகையில் தங்கள் சட்டைகளைக் கழற்றிவிட்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: thiruvaatur koiladikesava permal temple
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி-க்கு நன்றி தெரிவித்த தமிழக ஆளுநர்

Next Post

அரசு அதிகாரியைக் கொலை செய்ய முயன்ற திமுகவினர் – நடந்தது என்ன?

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies