ஆயுத பூஜை விடுமுறை சிறப்பு பேருந்துகள் இயக்கம்?
Apr 29, 2026, 10:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆயுத பூஜை விடுமுறை சிறப்பு பேருந்துகள் இயக்கம்?

Murugesan M by Murugesan M
Oct 20, 2023, 05:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆயுத பூஜை மற்றும் 4 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி, பயணிகளின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது.

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை, சனிக்கிழமை, ஞாற்றுக்கிழமை என 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

தொடர் விடுமுறையை யொட்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களிலிருந்து சுமார் 4 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழக போக்குவரத்துறை அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு பேருந்துகள், இன்று முதல் வரும் ஞாயிறு வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை, நெல்லை, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கும், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம், திருவண்ணாமலை, சிதம்பரம், புதுச்சேரி, கடலூர் ஆகிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதேபோல, பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், காஞ்சிபுரம், ஓசூர், திருத்தணி, திருப்பதிக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

ஆக மொத்தம் 4 ஆயிரம் பேருந்துகளில் 2,265 பேருந்துகள் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இயக்கப்படுகிறது. மீதமுள்ள 1,735 பேருந்துகள் கோவை, சேலம், திருச்சி, மதுரை, பெங்களூரு ஆகிய முக்கிய நகரங்களிலிருந்து தமிழகத்தின் மற்ற நகரங்களுக்கு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தீபாவளி, பொங்கல் என முக்கிய நாட்களிலும் சரி, அல்லது தொடர் விடுமுறையின் போதும் சரி, அதிக அளவில் சிறப்புப் பேருந்து இயக்கப்படுவதாக அறிவிப்பு வரும்.

இதை நம்பி பொது மக்கள் அந்த அந்த பகுதிக்குச் சென்றால், போதிய பேருந்துகள் இல்லாமல் இரவு முழுவதும் தவித்து வந்தனர். இது தொடர்பான செய்திகள் தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் பாதிக்கப்பட்ட பொது மக்கள் பேட்டியுடன் வெளியானது.

அதுபோன்று இல்லாமல், இந்த முறையாவது உண்மையாக மக்கள் சேவை செய்ய போக்குவரத்துறையும், திமுக அரசும் முன்வருமா என பொது மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags: special government busDasara Festivalbus reservation
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நவம்பர் 6-ந்தேதி வரை நீட்டிப்பு!

Next Post

நியோமேக்ஸ் நிதி மோசடி வழக்கு: அதிரடியில் உயர்நீதிமன்றம்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies