ஆயுத பூஜை விடுமுறை சிறப்பு பேருந்துகள் இயக்கம்?
Sep 13, 2026, 04:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆயுத பூஜை விடுமுறை சிறப்பு பேருந்துகள் இயக்கம்?

Murugesan M by Murugesan M
Oct 20, 2023, 05:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆயுத பூஜை மற்றும் 4 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி, பயணிகளின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது.

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை, சனிக்கிழமை, ஞாற்றுக்கிழமை என 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

தொடர் விடுமுறையை யொட்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களிலிருந்து சுமார் 4 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழக போக்குவரத்துறை அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு பேருந்துகள், இன்று முதல் வரும் ஞாயிறு வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை, நெல்லை, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கும், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம், திருவண்ணாமலை, சிதம்பரம், புதுச்சேரி, கடலூர் ஆகிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதேபோல, பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், காஞ்சிபுரம், ஓசூர், திருத்தணி, திருப்பதிக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

ஆக மொத்தம் 4 ஆயிரம் பேருந்துகளில் 2,265 பேருந்துகள் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இயக்கப்படுகிறது. மீதமுள்ள 1,735 பேருந்துகள் கோவை, சேலம், திருச்சி, மதுரை, பெங்களூரு ஆகிய முக்கிய நகரங்களிலிருந்து தமிழகத்தின் மற்ற நகரங்களுக்கு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தீபாவளி, பொங்கல் என முக்கிய நாட்களிலும் சரி, அல்லது தொடர் விடுமுறையின் போதும் சரி, அதிக அளவில் சிறப்புப் பேருந்து இயக்கப்படுவதாக அறிவிப்பு வரும்.

இதை நம்பி பொது மக்கள் அந்த அந்த பகுதிக்குச் சென்றால், போதிய பேருந்துகள் இல்லாமல் இரவு முழுவதும் தவித்து வந்தனர். இது தொடர்பான செய்திகள் தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் பாதிக்கப்பட்ட பொது மக்கள் பேட்டியுடன் வெளியானது.

அதுபோன்று இல்லாமல், இந்த முறையாவது உண்மையாக மக்கள் சேவை செய்ய போக்குவரத்துறையும், திமுக அரசும் முன்வருமா என பொது மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags: special government busDasara Festivalbus reservation
Share
Tweet
SendShare
Previous Post

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நவம்பர் 6-ந்தேதி வரை நீட்டிப்பு!

Next Post

நியோமேக்ஸ் நிதி மோசடி வழக்கு: அதிரடியில் உயர்நீதிமன்றம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies