மைசூர் தசரா திருவிழா கோலாகலம்: இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு!
Jun 15, 2026, 07:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மைசூர் தசரா திருவிழா கோலாகலம்: இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Oct 25, 2023, 01:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகப் புகழ் பெற்ற மைசூர் தசரா திருவிழாவின் இறுதி நாளான நேற்று, ஜம்பு சவாரி ஊர்வலம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த கண்கொள்ளா காட்சியை இலட்சக்கணக்கான மக்கள் கண்டு இரசித்தனர்.

நவராத்திரி திருவிழாவும், தசரா பண்டிகையும் இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டாலும், மைசூரில் நடக்கும் தசரா விழாவைப்போல வேறெங்கும் அவ்வளவு வண்ணமயமாக இருப்பதில்லை. கலை, கலாசாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், மன்னர் காலம் தொட்டு கொண்டாடப்படும் மைசூரு தசரா விழா உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது.

அந்த வகையில், உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா, கடந்த 15-ஆம் தேதி வெகுவிமரிசையாக தொடங்கியது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தசரா விழா 413 ஆண்டுகளை நிறைவுசெய்து, 414-வது ஆண்டாக இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.

தசரா விழாவையொட்டி அரண்மனை முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும், மைசூர் நகரம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மைசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. மேலும், உணவு மேளா, தசரா கண்காட்சி, புத்தகத் திருவிழா, மலர் கண்காட்சி, திரைப்பட விழா, குழந்தைகள் தசரா உள்ளிட்டவை நடைபெற்றது.

தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு உட்பட ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் அனைத்து யானைகளுக்கும் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதற்கிடையே சாமுண்டி மலையில் இருந்து, சாமுண்டீஸ்வரி அம்மன் தங்க சிலை, அரண்மனை வளாகத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.

அதைத்தொடர்ந்து 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரி அபிமன்யு யானை மீது ஏற்றி பாதுகாப்பாக கட்டப்பட்டது. அதன்பின்னர் தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து, அபிமன்யு யானை தங்க அம்பாரியை சுமந்து கம்பீர நடைபோட்டு செல்ல, மற்ற யானைகள் அணிவகுத்து நடந்து சென்றன.

இந்த ஊர்வலத்தில் கர்நாடகாவில் உள்ள 30 மாவட்ட நிர்வாகங்களின் சார்பிலும், கலைகலாச்சார வாகனங்கள், இசைக்குழுவினர், நாட்டுப்புற கலைக்குழுவினர் உள்ளிட்ட பல்வேறு குழுவினர் பின்தொடர்ந்து சென்றனர்.

மேலும், சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியை பிரதிபலிக்கும் ஊர்தியும், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் தொடர்பான‌ ஊர்திகளும் இதில் இடம் பெற்றிருந்தன. சாலையின் இருபுறங்களிலும் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்து ஜம்பு சவாரி ஊர்வலத்தை கண்டு இரசித்தனர்.

Tags: Mysore Dussehra Festivalnavarathiri festivel
ShareTweetSendShare
Previous Post

சென்னை கிரிக்கெட் போட்டியின் போது தேசியக் கொடி அவமதிக்கப்பட்ட விவகாரம்!

Next Post

திருநீற்றில் கலப்படம் – திருச்செந்தூர் கோவிலில் பரபரப்பு!

Related News

3வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; நயினார் நேரில் ஆறுதல்

சபரிமலையில் சாமி தரிசனம் செய்த அன்புமணி தம்பதி

தவெக எம்.எல்.ஏவுக்காக காத்திருந்த மூத்த தலைவர்; இவருக்கு இந்த கதியா ?

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies