மைசூர் தசரா திருவிழா கோலாகலம்: இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு!
Jul 31, 2026, 02:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மைசூர் தசரா திருவிழா கோலாகலம்: இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Oct 25, 2023, 01:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகப் புகழ் பெற்ற மைசூர் தசரா திருவிழாவின் இறுதி நாளான நேற்று, ஜம்பு சவாரி ஊர்வலம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த கண்கொள்ளா காட்சியை இலட்சக்கணக்கான மக்கள் கண்டு இரசித்தனர்.

நவராத்திரி திருவிழாவும், தசரா பண்டிகையும் இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டாலும், மைசூரில் நடக்கும் தசரா விழாவைப்போல வேறெங்கும் அவ்வளவு வண்ணமயமாக இருப்பதில்லை. கலை, கலாசாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், மன்னர் காலம் தொட்டு கொண்டாடப்படும் மைசூரு தசரா விழா உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது.

அந்த வகையில், உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா, கடந்த 15-ஆம் தேதி வெகுவிமரிசையாக தொடங்கியது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தசரா விழா 413 ஆண்டுகளை நிறைவுசெய்து, 414-வது ஆண்டாக இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.

தசரா விழாவையொட்டி அரண்மனை முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும், மைசூர் நகரம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மைசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. மேலும், உணவு மேளா, தசரா கண்காட்சி, புத்தகத் திருவிழா, மலர் கண்காட்சி, திரைப்பட விழா, குழந்தைகள் தசரா உள்ளிட்டவை நடைபெற்றது.

தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு உட்பட ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் அனைத்து யானைகளுக்கும் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதற்கிடையே சாமுண்டி மலையில் இருந்து, சாமுண்டீஸ்வரி அம்மன் தங்க சிலை, அரண்மனை வளாகத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.

அதைத்தொடர்ந்து 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரி அபிமன்யு யானை மீது ஏற்றி பாதுகாப்பாக கட்டப்பட்டது. அதன்பின்னர் தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து, அபிமன்யு யானை தங்க அம்பாரியை சுமந்து கம்பீர நடைபோட்டு செல்ல, மற்ற யானைகள் அணிவகுத்து நடந்து சென்றன.

இந்த ஊர்வலத்தில் கர்நாடகாவில் உள்ள 30 மாவட்ட நிர்வாகங்களின் சார்பிலும், கலைகலாச்சார வாகனங்கள், இசைக்குழுவினர், நாட்டுப்புற கலைக்குழுவினர் உள்ளிட்ட பல்வேறு குழுவினர் பின்தொடர்ந்து சென்றனர்.

மேலும், சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியை பிரதிபலிக்கும் ஊர்தியும், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் தொடர்பான‌ ஊர்திகளும் இதில் இடம் பெற்றிருந்தன. சாலையின் இருபுறங்களிலும் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்து ஜம்பு சவாரி ஊர்வலத்தை கண்டு இரசித்தனர்.

Tags: navarathiri festivelMysore Dussehra Festival
ShareTweetSendShare
Previous Post

சென்னை கிரிக்கெட் போட்டியின் போது தேசியக் கொடி அவமதிக்கப்பட்ட விவகாரம்!

Next Post

திருநீற்றில் கலப்படம் – திருச்செந்தூர் கோவிலில் பரபரப்பு!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies