ஐபிஎல் : டெல்லி அணி விடுவிக்கப்போகும் வீரர்கள்!
Jun 15, 2026, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபிஎல் : டெல்லி அணி விடுவிக்கப்போகும் வீரர்கள்!

Murugesan M by Murugesan M
Nov 23, 2023, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி அணியில் இருந்து மணீஷ் பாண்டே மற்றும் சர்பராஸ் கான் ஆகிய இரு வீரர்களையும் விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி துபாயில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் 10 அணிகளும் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை இன்னும் 4 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் அணிகளுக்கு இடையில் வீரர்களை டிரேட் முறையில் ஒப்பந்தம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக அனைத்து அணிகளும் டிரேட் முறையில் வீரர்களை மாற்றிக் கொள்ள முயன்று வருகின்றனர். ஏற்கனவே லக்னோ அணியிடம் இருந்து மும்பை அணி ரொமாரியோ செப்பர்டை ஒப்பந்தம் செய்தது.

அதேபோல் இன்று ஆவேஷ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் இரு வீரர்களையும் லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் டிரேட் செய்து கொண்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் டெல்லி, கேகேஆர், சிஎஸ்கே உள்ளிட்ட அணிகளும் டிரேட் செய்ய முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் டெல்லி அணி தரப்பில் மணீஷ் பாண்டே மற்றும் சர்பராஸ் கான் இருவரையும் டிரேட் செய்ய முயற்சிகள் நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் எந்த அணிகளும் இந்த இரு வீரர்களையும் டிரேட் செய்ய முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் டெல்லி அணி நிர்வாகிகள் இந்த இரு வீரர்களையும் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு ரிஷப் பண்ட் விளையாடாத காரணமாக டெல்லி அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

இம்முறை ரிஷப் பண்ட் மீண்டும் வரவுள்ளதால், மிடில் ஆர்டரில் களமிறங்கும் மற்ற இந்திய வீரர்கள் திறமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று டெல்லி அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதனால் மினி ஏலத்திற்கு முன் பார்மில் இல்லாத வீரர்களை வெளியேற்றிவிட்டு, ஏலத்தின் போது, உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை தேடி பிடிக்க டெல்லி அணி ஆயத்தமாகி வருகிறது.

Tags: delhiiplt 20
ShareTweetSendShare
Previous Post

அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம்!

Next Post

எக்ஸ் தளத்தில் எனக்கு கணக்கு இல்லை – சாரா டெண்டுல்கர்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies